2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கை மாணவர்கள் வூஹானிலிருந்து இன்று அகற்றப்படுவர்

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அதிகம் தொற்றியுள்ள நகரமாகக் கருதப்படும் சீனாவின் வூஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்கள் இன்று அங்கிருந்து அகற்றப்படுவரென, மாணவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகரில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை அந்ததந்த நாடுகளின் விசேட விமானங்கள் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் விமானமொன்று வூஹான் நகரில் தரையிறங்குவதற்கான அனுமதியை சீன அரசாங்கத்திடம் இலங்கை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள சீன அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தியுள்ளதாக ​இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .