Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 30 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரவதையைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழுவொன்று, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், குறித்த துணைக்குழு, எதிர்வரும் 2ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் 12ஆம் திகதி வரை, அக்குழு இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவில், மோல்டோ, மொரிஷியர், சைப்ரஸ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நால்வர் அங்கத்துவம் வகிப்பதாகவும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இரகசியக் கூட்டத்தொடரின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் குறித்த குழுவினர், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் அமைப்புகளின் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
9 hours ago