2026 மார்ச் 05, வியாழக்கிழமை

ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் மூத்த அதிகாரிகள் மூவர் கைது

Editorial   / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்முதல் செயல்முறையுடன் தொடர்புடைய ஊழல் தொடர்பாக வர்த்தக அமைச்சின்  முன்னாள் மூத்த அதிகாரிகள் மூவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால்  (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எம். பிரியங்கா மத்தும பண்டார அத்தபத்து, முன்னாள் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) துரைசாமி ஜீவானந்தம் மற்றும் தலைமை நிதி அதிகாரி அரவிந்த பிரியர்தர்ஷனி டி சில்வா ஆகியோர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

லலித் அதுலத்முதலி மஹாபோல உயர் கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்திற்கு நிதியளிப்பதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் லாட்டரியை தொடங்குவதற்கான கொள்முதல் செயல்பாட்டில் வெற்றிகரமான முதலீட்டாளருக்கு ஏலத்தை வழங்கத் தவறியதன் மூலம் அரசாங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால்    மூன்று பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் புதிய ஏலங்களை கோரியதாகக் கூறப்படுகிறது, இது ஊழல் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதலாம், இரண்டாவது சந்தேகநபர்கள் மீது ஆரம்ப ஏல செயல்முறையின் போது நிராகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ரூ. 1 மில்லியன் லஞ்சம் கேட்டு பெற்றதாக மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,  

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .