Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்தியமை மற்றும் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள இராணுவத்தில் லெப்டினன் கேணல் பதவிநிலை வகிக்கும் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எழுவருக்கு எதிரான வழக்கை, செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நேற்று (09) தீர்மானித்தது.
சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜேரத்ன, கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தினாலேயே, இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது.
எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவின் சாட்சியத்துடன், இவ்வழக்குக்கான சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென, வழக்கு தொடர்பில் மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மன்றில் அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago