2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

எதிராக வாக்களித்த அந்த ஒருவர் யார்?

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் மீதான விவாதம், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்றது விவாதத்துக்குப் பின்னர், சற்றுமுன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. 

இந்த சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா? என சபைக்குத் தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கேட்டார். அப்போது எழுந்த ஆளும் கட்சியின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, வாக்கெடுப்பை நடத்துமாறு கோரினார். 

இந்த சட்டமூலத்துக்கு புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவே எதிராக வாக்களித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .