2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘எதிரியை விடுதலை செய்ய வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“களுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய 14ஆவது குற்றவாளியை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் கோரிக்கைக்கு அமைவாக,  கைதிகளை பார்வையிடச் சென்றபோது தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில், தனக்கு 57 இடங்களில் காயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களுள் 14ஆவது குற்றவாளி மீதான விசாரணையை மீளவும் விசாரிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், குறித்த எதிரி உள்ளிட்ட 16 பேர் தொடர்பாக ஏற்கெனவே விசாரணைகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், 15 பேர் தப்பிச்சென்றிருந்த போதும் குறித்த குற்றவாளிக்கு வழங்கிய தீர்ப்பில் வழக்கை ஜுரி சபை முன்னால் விசாரிக்க வேண்டுமா, இல்லையா என குற்றச்சாட்டப்பட்டவரை மேல் நீதிமன்ற நீதிபதி கேட்கத் தவறியிருப்பதால் வழக்கு விசாரணையையும் தண்டனையையும் செல்லுபடியற்றதாகவும் அத்துடன், குறித்த சம்பவம் 21 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாலும் அது தெர்டர்பான விசாரணையை மீள விசாரணைக்கு அனுப்பாது விடுதலை செய்ய வேண்டும் என குற்றவாளி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நான் உயிருடன் உள்ளதாலும் இந்த வழக்கை மீள விசாரிப்பது சிறந்ததென குறிப்பிட்டு மீள் விசாரணை செய்வதற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் “எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?”  என்ற நோக்குடன் குறித்த குற்றவாளியை விடுதலை செய்யுமாறு நான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், ஜனாதிபதிக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனாலும், தற்போது குறித்த குற்றவாளி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றால் உத்தவிப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போதும் எனது நிலைப்பாடு குறித்த குற்றவாளியை விடுதலை செய்யவேண்டும் என்பதாகவே உள்ளது என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .