2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘எனக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிப்பதற்காக தனக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்தார்.

கண்டி பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக ச் சந்திப்பொன்றின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி, தன்னைப் பற்றியும் தன்னுடைய பிரத்தியேக செயலாளராக இருந்த தனது சகோதரரான பாஹிம் பற்றியும் அடிப்படையற்ற விதமான கருத்துகளை தெரிவித்துள்ளதுடன், இதனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்,  இது சம்பந்தமாகப் பதிலளிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு அவர் கேட்டுகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .