Simrith / 2025 ஜனவரி 09 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் எம்.பி.யும் கொலைக் குற்றவாளியுமான துமிந்த சில்வாவின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பேசிய ஜெயசிங்க, “டிவி சேனல்களுக்கு நாங்கள் பயப்படவில்லை, தம்பியை விடுவிக்க மாட்டோம்” என்றார்.
குறித்த தொலைக்காட்சி சனலை நேரடியாகப் பெயரிட்டுக் கூறாத அதே வேளையில், அதன் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட ஜெயசிங்க, இது நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், துமிந்த சில்வாவுக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை வேண்டுமா என்பதை அறிய மருத்துவ மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
2011 ஆம் ஆண்டு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் தண்டனை பெற்ற துமிந்த சில்வாவுக்கு, 2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago