Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு முன் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் தான் அப்போது சமூகமளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இதனால், வாக்குமூலம் பதிவு செய்ய ஆணைக்குழு மாற்று நாளை அறிவித்துள்ளது.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago