Freelancer / 2026 ஏப்ரல் 25 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கற்களை எட்டியுள்ளார்.
44 பந்துகளில் 81 ரன்கள் குவித்த கோலி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், இந்த போட்டியில் சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம், கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்களை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
குஜராத் அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணிக்கு, கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் (55 ரன்கள்) இடையிலான 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றியை எளிதாக்கியது.
இந்த அபார வெற்றியின் மூலம் ஆர்சிபி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. R
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago