2025 ஜூன் 25, புதன்கிழமை

’ஐ.தே.க. கூட்டணியில் மொட்டு உறுப்பினர்கள்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர்  பீ.ஹெரிசன் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர்கள் இவ்வாறு இணைந்துக்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனைக் கூறிய அமைச்சர், புதிய கூட்டணி  விரைவில் தனது பலத்தை வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .