Editorial / 2025 மே 28 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொது சாலையில் முன் சக்கரத்தை உயர்த்தி மோட்டார் சைக்கிளை ஒற்றை சக்கரத்தில் ஓட்டி தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு இளைஞனுக்கு ரூ.55,000 அபராதம் விதித்த, குளியாப்பிட்டி நீதிபதி ரந்திகா லக்மல் ஜெயலத் கடுமையாக கண்டித்தார்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தல், நம்பர் பிளேட்டுகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமல் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பொலிஸார்வழக்கு பதிவு செய்தனர்.
குளியாப்பிட்டியில் உள்ள கனதுல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் தசுன் ஷெவந்தா குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளை ஒற்றை சக்கரத்தில் தாறுமாறாக ஓட்டிச் சென்று பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக பொலிஸ் அதிகாரி கமல் ரத்நாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த முறையில் ஒற்றை சக்கரத்தில் ஓட்டுவது பாதசாரிகள் மற்றும் சவாரி செய்பவரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் கூறினார். மோட்டார் சைக்கிள் இரு சக்கர வாகனம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்ற குற்றங்களைச் செய்யும் மற்ற இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் தண்டனையை விதிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அதனை கவனத்தில் எடுத்த நீதிமன்றம், ரூ.55,000 அபராதம் விதித்தது.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026