2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

காசலில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

Simrith   / 2025 நவம்பர் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வார தொடக்கத்தில் (10) காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண்கள் பிறந்ததை  மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.  

மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தனந்தநாராயனாவின் கூற்றுப்படி, பன்னலவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

 இரட்டைக் குழந்தைகள் 4.4 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது, இருவரும் நிலையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டையர்கள் வயிற்றின் ஊடாகவே இணைந்துள்ளனர்.  மேலும் மூன்று மாதங்களில் லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

மூன்று மாத மீட்பு காலத்திற்குப் பிறகு, இரட்டையர்கள் வெளியேற்றத்திற்குப் பிறகு, மேலதிக மதிப்பீடு மற்றும் அறுவை சிகிச்சைக்கான தயாரிப்புக்காக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவமனையில் இரட்டையர்கள் பிறப்பு அசாதாரணமானது அல்ல என்றாலும், சமீபத்திய வரலாற்றில் காசலில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இது என்று வைத்தியர் தனந்தநாராயனா குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X