Mayu / 2026 மே 14 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுமார் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் (IT Controller) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திணைக்களத்தின் நிதிக் கையாளல் மற்றும் வருமானச் சேகரிப்பு நடைமுறைகளில் நீண்டகாலமாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்திருந்தன. இது தொடர்பாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்த விரிவான விசாரணைகளின் போதே, திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பிரதானியாகக் கடமையாற்றிய அதிகாரி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அல்லது தரவுகளை மாற்றியமைத்து, சுமார் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரசாங்கப் பணத்தை இவர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிதி மோசடிச் சங்கிலியில் மேலும் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும், தொழில்நுட்ப ரீதியாக இந்த மோசடி எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், திணைக்களத்தின் ஏனைய கணக்காய்வு அறிக்கைகளும் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
12 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
47 minute ago