Editorial / 2026 மே 01 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு. தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கால்நடைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.
வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பல மாடுகள் மயங்கி வீழ்ந்துள்ளன. ஒரு சில மாடுகள் உயிரிழந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்த போதிலும், அவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், வெயிலின் தாக்கத்தால் மயங்கி வீழும் மாடுகளுக்கு, அந்தந்த இடங்களுக்கே நேரில் செல்லும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, அவசர சிகிச்சைகளை அளித்து அவற்றை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக வெப்பம் காரணமாகப் பால் உற்பத்தி குறைவடைதல் மற்றும் சினை மாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுதல் போன்ற சிக்கல்களும் எழுந்துள்ளன.
எனவே, கால்நடைகள் போதிய அளவு நீர் அருந்துவதை உறுதிப்படுத்துமாறும், கடும் வெயில் வேளைகளில் வெட்டவெளிகளில் மாடுகளைக் கட்டி வைப்பதைத் தவிர்க்குமாறும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.




40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago