2026 மே 02, சனிக்கிழமை

கண்டியை தொற்றியுள்ள கொரோனா

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,400 ஐ கடந்துள்ளதாக,  கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை 1,423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிய தொற்றாளர்களாக 80 பேர் பதிவாகியுள்ளனர்.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய  இதுவரை 910 தொற்றாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 392 பேர் நுவரெலியாவிலும் மாத்தளையில் 121 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .