2026 மார்ச் 16, திங்கட்கிழமை

கந்தர விபத்தில் 62 பேர் படுகாயம்

Editorial   / 2025 ஜனவரி 19 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை-தங்கல்ல பிரதான சாலையில் உள்ள கந்தரவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 62  பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் அறுவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 35 பெண்கள், 26 வயதான நெதர்லாந்து பிரஜை உட்பட 27 ஆண்கள், மூன்று சிறார்கள், பஸ்ஸொன்றின் சாரதி மன்றும் இன்னுமிருவர் அடங்குகின்றனர் .

காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக கந்தர மற்றும் மாத்தறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்துள்ளன என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X