2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கிரிக்கெட் வீரர் மைதானத்தில் மரணம்

Editorial   / 2025 நவம்பர் 10 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொடை, அலுத்தோபொல பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆட்டத்தின் போது பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் பலத்த காயமடைந்து மினுவங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் பலுகஹவெல, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மினுவங்கொடை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X