2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்தவர் கைது

Editorial   / 2025 நவம்பர் 10 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த, நாட்டின் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை  இவர் திருடியுள்ளார்.

தொடர்பாக, கிட்டத்தட்ட 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட தீவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என  புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 60 வயதுடையவர் என்றும், அவர் 1993 ஆம் ஆண்டு நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொரள்ளையில்  உள்ள சிறிசாத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிப்பறை கிண்ணத்தில் ஒரு பவுண்டு எடையுள்ள கிட்டத்தட்ட 3 கிலோ கிராம்  தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடையின் இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையிலிருந்து கடந்த மாதம் 25 ஆம் திகதி, இரவில் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர், அலமாரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X