Editorial / 2025 நவம்பர் 21 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான , 350 கிராம் தங்க நகை, காணாமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் செல்லத்துரை ரமேஷ் வெள்ளிக்கிழமை ( 21 ) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி வழக்கு சான்று பொருள் பொறுப்பாளர் வியாழக்கிழமை ( 20 ) களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
18 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026