Freelancer / 2026 ஜனவரி 03 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் திடீர் வெடிப்பை சீர்செய்து இன்று (3) நள்ளிரவுக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எதிர்பார்க்கிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .