2026 மே 01, வெள்ளிக்கிழமை

காணாமல் போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்

J.A. George   / 2021 மார்ச் 21 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனதாகக் கூறப்படும் பம்பலப்பிட்டி, புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவன் நேற்றிரவு 10 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.

தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறு வீட்டை விட்டு சென்றதாக அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வீட்டுக்கருகிலேயே இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அந்த மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் திகதியன்று மாணவன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .