2026 மார்ச் 16, திங்கட்கிழமை

குகைக்குள் பெண்ணின் சடலம்: சந்தேகநபர் தன்னுயிரை மாய்த்தார்

Editorial   / 2025 ஜூன் 08 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் 27 வயதான நபர், தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரது சடலம், வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

2025 ஜனவரி மாதத்தில் தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த, திருமணமாகாத 52 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே ஜூன் 5 ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர், ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி இருந்தார்.

அந்த நபரின் சடலம், மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X