2026 மே 02, சனிக்கிழமை

’கூட்டணியை விரைவுப்படுத்த 10 பேர் கொண்ட குழு’

J.A. George   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கட்சியின் பொதுச்செயலாளரின் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான பரந்த அரசியல் அணியொன்றை கட்டியெழுப்பி 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று(28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .