2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘கூட்டமைப்போடு ஐ.தே.க ஆட்சியமைத்தால் பிரச்சினை இல்லை’

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.கவுக்கு  ஆட்சிய​மைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ​இணைத்தே ஐ.தே.க தனக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு​போதும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனத்திட்டவட்டமாக தெரிவித்திருப்பதால், அவர்கள் த.தே.கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்கலாம் எனவும் அவர் கூறினார்.

எனினும், அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியடமே இருப்பதாகவும், இதற்கு பொதுத்தேர்தலுக்குச் செல்வதே தீர்வு எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .