Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 மே 28 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரையின் மேலேறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு இறக்கப்பட்ட கைதி சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றசெயல்களில் ஈடுபட்ட கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். அதன்பின்னர், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அவர், மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி சனிக்கிழமை (17) மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று (28) மதியம் கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது 41) என்பவரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறக்கப்பட்டார். அத்துடன் அவருடைய போராட்டமும் முடிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
11 May 2025
11 May 2025