Nirosh / 2021 ஜனவரி 23 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் இன்று (23) கைது செய்துள்ளனர்.
குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
NC-VF 1909 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டு செல்வதாக திருகோணமலை சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
11 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
33 minute ago