2026 மே 02, சனிக்கிழமை

கைதிகளின் மரணத்துக்கு துப்பாக்கிச் சூடே காரணம்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்த கைதிகளுள் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, நிபுணர்கள் குழு நடத்திய பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் வத்தளை நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நான்கு கைதிகளின் சடலங்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டுமென கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுடைய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, கைதிகளின் சடலங்களை தகனம் செய்ய உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .