S.Renuka / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரிய நாட்டு நாடகங்கள், இணையத்தள விளையாட்டுகள், சமூக வலைத்தளக் காணொளிகள் ஆகியவற்றில் சிறுமிகள் மூவரும் தீவிரமாக மூழ்கியிருந்துள்ளனர். அதனால் அவர்களின் தந்தை மகள்களிடமிருந்து கைப்பேசிகளைப் பறித்து வைத்துள்ளார்.
தங்களது விருப்பமான பொழுதுபோக்கிற்குத் தந்தை தடை விதித்ததால் ஆத்திரமடைந்த சிறுமிகள், விபரீத முடிவு ஒன்றை எடுத்து, ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து தங்கள் உயிர்களை மாய்த்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அவர்களின் தந்தை, குழந்தைகளின் நலன் கருதி கைப்பேசியைப் பிடுங்கி வைத்தது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு செய்தது பாவமா? என்று அவர் உருக்கமாகக் கேட்டது பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.
இணையப் பயன்பாடு தற்காலச் சிறுவர்களிடம் எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு அந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
18 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago