Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 80 பேர், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்தவர்கள் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஏனையோர் அவர்களுடன் சமூக தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுடன் சமூக தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 19 ஆம் திகதி விமான நிலையம் மூடப்பட்ட நாள் முதல், இலங்கைக்குள் பிரவேசிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது, இம் மாதம் 19 ஆம் திகதி வரையான 30 தினங்கள் நீடிக்ககப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எவரேனும,; ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை இனங்காண்பதற்கு மேற்குறித்த 30 நாள்கள் போதுமானதென அறியப்பட்டுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
42 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
7 hours ago