2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

கோப் குழுவுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப் குழு உள்ளிட்ட மேற்பார்வை குழுவின் விசாரணை நடவடிக்கைகளை பார்வையிட, நாளை முதல் ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கோப் குழு கூடவுள்ளதுடன், இதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் சகல விசாரணை நடவடிக்கைகளையும் ஊடகங்கள் முன்னிலையில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை, அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்தத்துக்கமைய, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .