2025 ஜூன் 09, திங்கட்கிழமை

குழந்தை யாருடையது? விமான நிலையத்தில் பெண் தடுத்துவைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வயதுக் குழந்தையுடன் இலங்கையிலிருந்து தனது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண், டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் இருந்த குழந்தை யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளதால், 49 வயதான கெலிட் நாகாஷ், என்ற பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குழந்தை அவருடைய சொந்தக் குழந்தையாக என்பதை அறிய டி.என்.எ சோதனை செய்யப்படடவுள்ளதாக தெரிகிறது.

இந்த சோதனையில் அந்த குழந்தை அவருடையது இல்லையென தெரிந்தால் அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்ததையடுத்து,  அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

வர்த்தகப் பயணத்தின்போது அவர் இலங்கையில் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தைக்காக அவர் அளித்த விசா விண்ணப்பம் மறுக்கப்பட்டுவிட்டதாகவும் நாகாஷ் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .