2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

சடுதியாக அதிகரித்த இஞ்சியின் விலை

S.Renuka   / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் சந்தையில் இஞ்சியின்  விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் 300  தொடக்கம் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை, தற்போது 1 கிலோ கிராம் 1,500  ரூபாய் தொடக்கம் 2,000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இஞ்சிச் செய்கைகள் அழிவடைந்துள்ளது எனவும் இந்நாட்களில் உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .