2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சட்டமா அதிபர் கையில் கோப் அறிக்கை

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலான அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே, இந்த அறிக்கை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனே, குறித்த மோசடி விவகாரத்தின் குற்றவாளியென, கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .