2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு செல்கிறார் ஜனாதிபதி அனுர

Editorial   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .