Editorial / 2024 ஒக்டோபர் 09 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

“அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன். எவ்வாறாயினும், முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எவ்விதத்திலும் குறைக்கும் எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்பதை நான் தெரிவிக்கிறேன்”.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா (ஓய்வு) திங்கட்கிழமை (ஒக்டோபர் 07) ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தின் போது விமானப்படை வீரர்களிடம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் விமானப்படை தலைமையகத்தின் பல பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago