2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாக மட்டுமே சானிட்டரி நாப்கின் விநியோகம்

Editorial   / 2025 ஜூலை 03 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை  மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் - 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) பதிவுசெய்யப்பட்டு SLS 1732:2022 இன் கீழ் சான்றளிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் பாடசாலைளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு சுகாதார நாப்கின் பாக்கெட்டுகளை விநியோகிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சுதெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .