Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 11 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தாம் வகுப்பில் படிக்கும் பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் அவசர நடவடிக்கை பிரிவுக்கு புதன்கிழமை (09) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், புத்தள பொலிஸ் பிரிவின் உனவட்டுன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்தச் சிறுமி குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை, அவளுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.
அவருடைய தாயும் தந்தையும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள். அவளுடைய , ஜூன் 4 ஆம் திகதி தாமரை பூ பறிக்க வீட்டிற்கு வருமாறு அச்சிறுமியின் சகோதரி அழைத்துள்ளார்.
அதன்படி, அவள் புத்தள உனவடுனவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த நாளில், சகோதரியின் கணவரும் புத்தள நகர சந்தைக்குச் சென்றனர்.
சிறிது தூரம் சென்ற போது, பணத்தை மறந்து வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளதாக தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துவிட்டு அவளுடைய கணவர் (மைத்துனர்) வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.
வீட்டின் ஓர் அறையில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்ய புத்தள பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
3 hours ago