2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

சிறு வியாபாரிகளுக்கு ’4% வட்டியுடன் கடனுதவித் திட்டம்’

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு வியாபாரங்களைக் கட்டியெழுப்புவதற்காக, நிவாரண வட்டியுடன் கூடிய கடனுதவியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அந்தக் கடனுதவித் திட்டம், அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென்றும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அமைச்சர், மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டுமாயின், வெளிநாட்டு இறக்குமதிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் நம் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கான வழிசமைத்துக் கொடுக்கப்படல் வேண்டுமென்றும் கூறினார்.

அதனால், 4 சதவீத வட்டியுடன், சிறு வியாபாரிகளுக்கான கடனுதவியை வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X