Freelancer / 2025 ஜூன் 13 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து சிவப்பு அறிவிப்பு ஒன்றை வௌியிடப்பட்டுள்ளது.
சிலாபத்தில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (13) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த சிவப்பு எச்சரிக்கை, நாளை (14) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய பகுதிகளைச் சேர்ந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும், மேலும் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக மாறும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மேல் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. R
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago