Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 23 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தின் போது, குண்டுகள் துளைத்து உயிரிழக்கும் குழந்தைகளை விடவும் சுத்தமான குடிநீர் இன்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என, யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டள்ளது.
உள்நாட்டில் இடம்பெறும் மோதல்களின் போது, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் அவ்வாறு சுத்தமான குடிநீர் கிடைக்காத குழந்தைகள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால், உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வருடாந்தம் மார்ச் மாதம் 22ஆம் திகதி, உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், உலகில் 663 மில்லியன் மக்கள் பருகும் குடிநீர் சுத்தமானதாக இல்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடுகளால் 15 வயதுக்குட்பட்ட 85,700 குழந்தைகள், வருடாந்தம் உயிரிழப்பதாக, யுனிசெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில், 5 வயதுக்குட்பட்ட 72,000 குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பர்கினா பஸோ, கெமரூன், ச்சாட், எத்தியோப்பியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
16 minute ago
27 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
31 minute ago
36 minute ago