2026 மே 11, திங்கட்கிழமை

dd

செல்பி எடுத்த நால்வருள் இருவர் மாயம்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவட்டுவன- ரூமஸ்ஸல கடற்கரையில் உள்ள கல்லொன்றின் மீது ஏறி, செல்பி எடுத்த நான்கு இளைஞர்கள் கடலுக்குள் வீழ்ந்துள்ளதுடன் அதில் இருவர் காணாமல் போயுள்ளதாக, ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு காணாமல் போன இருவர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 20, 19 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விழுந்தவர்களுள் இருவர் நீந்தி உயிர் தப்பியுள்ளதுடன் இருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞர்களைத் தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .