2026 மே 14, வியாழக்கிழமை

dd

‘ஜனாதிபதியாவதற்கு எனக்கு அதிர்ஷ்டமில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியாவதற்கு தனக்கு அதிர்ஷ்டமில்லை எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று(08) நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடுமையானவர் இல்லை எனவும், இதனால் அவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றும் கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .