2026 மே 11, திங்கட்கிழமை

’ஜனாதிபதியின் தேவைக்கேற்பவே சஜித் செயற்படுகின்றார்’

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் சஜித் பிரேமதாச சகல சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைகளையே நிறைவேற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ வாக்குகள் தேவை என்பதால் சிறையில் உள்ள மனிதர்களை தூக்கில் போட முயற்சிக்கின்றனர். அது மிகவும் மலிவான செயற்பாடாகும். மரண தண்டனைக்கு எதிராகவே எமது கட்சி உள்ளது. அதே நிலைப்பாட்டில்தான் நாங்களும் உள்ளோம்.  எனினும், அமைச்சர் சஜீத் பிரேமதாச, ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதுடன், அவர் ஜனாதிபதி கூறும் விடயங்களை தான் ஏற்றுக்கொள்கின்றார்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .