2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’ஜனாதிபதியுடன் எனக்கு பிரச்சினையில்லை’

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், தனக்கு எந்தவொருப் பிர​ச்சினையும் இல்லையென்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதியால், உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜேதாச ராஜபக்ஷ, தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், சபாநாயகரும் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க வேண்டுமெனக் கோரினார்.

இதற்கு மேற்கண்டவாறு தெரிவித்த சபாநாயகர், “ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில், எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்குரிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க நான் தயார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .