Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக சொத்துக்களை கொண்டுள்ள மக்கள் நம்பிக்கையை வென்ற, மக்கள் வங்கி, இலங்கை வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
குறித்த ஊழல் மோசடிகளை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை என்றால், எதிர்காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று, மேற்குறிப்பிட்ட வங்கிகளிலும், இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்கு முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
41 minute ago
2 hours ago
4 hours ago