2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

’டிட்வா’ நன்கொடையாக காணிகளை வழங்கலாம்

Janu   / 2026 ஜனவரி 26 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

'டிட்வா' சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் 'Rebuilding Sri Lanka' வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, அனர்த்தத்தால் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும்  திட்டம் தற்போது நடைபெற்று வருவதோடு, அதற்காக நாடு பூராகவும் உள்ள நன்கொடையாளர்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். காணி நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களை 0112331246 என்ற தொலைநகல் (Fax) இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரஜையையும் கைவிடாது, அவர்களின் வாழ்க்கையை முன்பை விட உயர்ந்த தரத்திற்கு மீண்டும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அந்த சகோதர மக்களுக்காக, 'Rebuilding Sri Lanka' வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு, நாடு பூராகவும் உள்ள அனைத்து நன்கொடையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது என்றும்  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X