2026 மார்ச் 26, வியாழக்கிழமை

தமிழ்நாடு எல்லையில் பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

Freelancer   / 2026 மார்ச் 26 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்டை மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு போதைப் பொருள் கடத்​தப்​படு​வ​தாக கிடைத்த தகவலை​யடுத்​து, தமிழக எல்​லை​யில் பொலிஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

தமிழகத்​தில் அடுத்த மாதம் 23 ஆம் திகதி சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப் பதிவு ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு வீச்​சில் செய்து வரு​கிறது.

மேலும் பொலிஸ் உட்பட அனைத்து அரசு துறை​களும் தேர்​தல் ஆணை​யத்​தின் மேற்​பார்​வை​யில் இயங்கி வரு​கின்​றன.பொலிஸாரும் தேர்​தல் தொடர்​பான பணி​களில் அதி​கள​வில் கவனம் செலுத்தி வரு​கின்​றனர்.

இதைப் பயன்​படுத்தி அண்டை மாநிலங்​களான ஆந்​தி​ரா, கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு சட்ட விரோத​மாக போதைப் பொருள் கள் மற்​றும் கள்​ளச் சாரா​யத்தை சிலர் கடத்தி வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையறிந்த பொலிஸ் அதி​காரி​கள் மாநில எல்​லை​யில் கண்​காணிப்பை தீவிரப்​படுத்த உத்​தர​விட்​டனர். அதன்​படி, கண்​காணிப்பு மற்​றும் ரோந்​துப் பணி முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது.

மேலும் அண்டை மாநிலங்​களி​லிருந்து தமிழகம் வரும் ரயில், பஸ்களை​யும் பொலி​ஸார் உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கின்​றனர். கடத்​தல் தொடர்​பாக தகவல் கிடைத்​தால் அதுகுறித்து பொலிஸுக்கு  தகவல் தெரிவிக்க பொது​மக்​களை பொலிஸார் கேட்​டுக் கொண்​டுள்​ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .