2025 மே 22, வியாழக்கிழமை

தமிழ், சிங்கள புலி உறுப்பினர்கள் 27 பேருக்கும் மறியல் நீடிப்பு

Thipaan   / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெஹான் சாமிக சில்வா

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள சந்தேகநபர்கள் 27 பேரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிக்கல, நேற்று திங்கட்கிழமை(21) உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கையும் ஜனவரி 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்தச் சந்தேகநபர்களில் மூவருக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணியொருவர், பிணை மனுவைச் சமர்ப்பித்தார். குறித்த மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரால் பெறப்பட்ட வாக்குமூலங்களின் சுருக்கத்தை சமர்ப்பிக்குமாறு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த மூன்று சந்தேகநபர்களும் தற்போது பிரான்ஸில் வசிக்கும் எல்.ரீ.ரீ.ஈ போராளியான ரூபனுடன் தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக முடிவடையவில்லை என்பதால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அமரநந்த கேட்டுக் கொண்டமைக்கிணங்கவே, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில்,  சட்டத்தரணிகளான, அன்டன் சேனாநாயக்க, ஆனந்த ஹெட்டியாராச்சி மற்றும் மேரி டிக்மன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X