2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பேருவளை- மஹல்கந்த, அளுத்ஹேன பகுதியில், நேற்று இரவு (14) கூரிய ஆயுதத்தால்  தாக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தாக்குதலில் படுகாயமடைந்த இவர், நாகொடை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னரே, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மஹல்கந்த- அளுத்ஹேன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தேயே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுடன்  தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இருவரும், ஒன்றாக இணைந்து மது அருந்திய போது, இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக,  ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .